<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-21903097</id><updated>2012-02-15T23:28:11.654-08:00</updated><title type='text'>போகிமரம்</title><subtitle type='html'>விலக்கப்பட்ட கனிகள் மட்டுமே கிடைக்கும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jsgnanasekar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jsgnanasekar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>5</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-21903097.post-113989560770912488</id><published>2006-02-13T21:38:00.000-08:00</published><updated>2006-02-13T21:40:07.720-08:00</updated><title type='text'>நள்ளிரவில் சூரியன்</title><content type='html'>காயங்கள் செய்து &lt;br /&gt;காணாமல் போயிருந்தான்&lt;br /&gt;போகி.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட தேடுதலுக்குப்பின்&lt;br /&gt;தனியறை ஒன்றில்&lt;br /&gt;போகியைக் கண்டான்&lt;br /&gt;யோகி.&lt;br /&gt;&lt;br /&gt;யோகியே ஆரம்பித்தான்.&lt;br /&gt;      இந்திரனில் ஒளிவட்டம் பார்த்து&lt;br /&gt; இவ்வுலகமே பயந்துபோக&lt;br /&gt; இங்கென்ன செய்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; சந்திரனின் ஒளிவட்டம் காண&lt;br /&gt; சந்தோஷமாய்க் காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; அபூர்வம் சொல்கிறேன்.&lt;br /&gt; அச்சப்படாமல்&lt;br /&gt; அன்றாடம் பார்க்கும்&lt;br /&gt; அற்ப சந்திரவட்டத்தை&lt;br /&gt; அதிசயிக்கிறாயே?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; இருக்கும் அதிசயங்கள் ரசிக்க&lt;br /&gt; உங்களுக்கு நேரம்&lt;br /&gt; இல்லாமல் போனதால்&lt;br /&gt; புதிதாய்&lt;br /&gt; நடக்கும் ஆச்சர்யங்கள் பார்த்து&lt;br /&gt; அதிசயிக்காமல்&lt;br /&gt; அச்சப்பட்டு போகிறீர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt; இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்.&lt;br /&gt; வெளிச்சத்தில் வாழ்ந்து வாழ்ந்தே&lt;br /&gt; இரவின் ரம்மியம்&lt;br /&gt; ரசிக்காமல் போனீர்கள்.&lt;br /&gt; சூரியனின் அதீதப் பிரகாசத்தில்&lt;br /&gt; நட்சத்திரங்களைக் &lt;br /&gt; குருடாக்கிப் போனீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; கலைடாஸ்கோப் போன்ற &lt;br /&gt; உங்கள் வாழ்க்கையில்&lt;br /&gt; உங்கள் விஞ்ஞான ஒளிபட்டு&lt;br /&gt; வண்ணங்களாய்ச் ஜொலிக்க&lt;br /&gt; சொக்கிப் போனீர்கள்.&lt;br /&gt; ஆனால்&lt;br /&gt; அதில் &lt;br /&gt; உடைந்த கண்ணாடித் துண்டுகளாய் &lt;br /&gt; உருளுகின்றன உங்களின் பாரம்பரியங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; கருவறை என்னும்&lt;br /&gt; கருப்பில் பிறந்த நீங்கள்&lt;br /&gt; நாகரீகம் என்ற ஒப்பனையில்&lt;br /&gt; இயந்திர வாழ்க்கை என்னும்&lt;br /&gt; வேஷம் போடுகிறீர்கள்&lt;br /&gt; அதிக கூலிக்காக!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; நாங்கள் செய்யும்&lt;br /&gt; பகல் வேலைகள்&lt;br /&gt; எங்கள் இரவுகளை&lt;br /&gt; எப்படி இருட்டாக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;போகி பதில் சொன்னான்.&lt;br /&gt; உங்கள் பகல்களில் &lt;br /&gt; சூரியன்கள் கூடிவிட்டன.&lt;br /&gt; உங்கள் ஆதவனின்&lt;br /&gt; அதீத வெப்பத்தால்&lt;br /&gt; இரவின் பனித்துளிகள்&lt;br /&gt; காணாமல் போயின.&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் பகல்களின்&lt;br /&gt; வரவு செலவுகள்&lt;br /&gt; உங்கள் இரவுகளில்&lt;br /&gt; நியாயத்தீர்ப்பிடப் படுவதில்லை.&lt;br /&gt; இதனால்&lt;br /&gt; உங்கள் பகல்கடன்கள்&lt;br /&gt; உங்கள் இரவையும் &lt;br /&gt; வட்டியில் விழுங்குகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் பகல்களில்&lt;br /&gt; சம்பாதிக்கப்போய்&lt;br /&gt; உங்கள் இரவுகளில் &lt;br /&gt; அதை வீடு சேர்க்க மறந்தீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் பகல்களில்&lt;br /&gt; அணைத்த விளக்குகளை&lt;br /&gt; உங்கள் இரவுகளில் &lt;br /&gt; மீண்டும் ஒளியேற்ற மறந்தீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் பகல்களில்&lt;br /&gt; கிணறு வெட்டப்போய்&lt;br /&gt; உங்கள் இரவுகளில் &lt;br /&gt; பூதம் கிளப்பிவிட்டீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் பகல்களில்&lt;br /&gt; அமிர்தம் எடுக்கப்போய்&lt;br /&gt; உங்கள் இரவுகளில் &lt;br /&gt; ஆலகாலம் கொண்டு வந்தீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் பகல்களில்&lt;br /&gt; கண்ணம்மாவை நனவாக்கி&lt;br /&gt; உங்கள் இரவுகளில் &lt;br /&gt; செல்லம்மாவைக் கனவாக்கிப் போனீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் பகல்களின் இறைவன்&lt;br /&gt; சூரியன்.&lt;br /&gt; அவன்&lt;br /&gt; காயங்களின் கலவை.&lt;br /&gt; அவனை ஆதரித்து ஆதரித்தே&lt;br /&gt; உங்கள் இரவுகளின் இறைவன்&lt;br /&gt; சந்திரனைக்&lt;br /&gt; களங்கங்களினால் &lt;br /&gt; காயமாக்கிப் போனீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் பகல்களில்&lt;br /&gt; வரங்கள் வாங்க&lt;br /&gt; நீங்கள் செய்யும் தவங்கள்&lt;br /&gt; தாய்ப்பூமியைச் &lt;br /&gt; சாபமாக்கிப் போவதைக்&lt;br /&gt; கொஞ்சம் தவம்  நிறுத்திக்&lt;br /&gt; கண்திறந்து பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; பகலில் காரியங்கள்&lt;br /&gt; இல்லாமல் போனால்&lt;br /&gt; பகலும் இரவும்&lt;br /&gt; இல்லாமல் போகுமே?&lt;br /&gt;&lt;br /&gt;போகி பதில் சொன்னான்.&lt;br /&gt; நான் கேட்பதெல்லாம்&lt;br /&gt; இயந்திர வாழ்க்கை குறைத்து&lt;br /&gt; இரவை ரசிக்க&lt;br /&gt; காலம் செய்யுங்கள் என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt; கண்ணின் வெள்ளை&lt;br /&gt; கருப்பைக் காப்பதைக்&lt;br /&gt; கணநேரம் ஒதுக்கி&lt;br /&gt; யோசித்துப் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் வாழ்க்கை என்பது&lt;br /&gt; கண்ணின் கட்டுமானம் போல்&lt;br /&gt; அமையட்டும்.&lt;br /&gt; கருப்பும் இருக்கட்டும்.&lt;br /&gt; வெள்ளையும் இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; பிறப்பு முதல் &lt;br /&gt; இறப்பு வரை&lt;br /&gt; கருப்பு வளராமல்&lt;br /&gt; அப்படியே இருக்கட்டும்.&lt;br /&gt; பிறப்பு முதல் &lt;br /&gt; நடுத்தரம் வரை&lt;br /&gt; வெள்ளை மட்டும்&lt;br /&gt; வளரட்டும்.&lt;br /&gt; இறப்பு வரை &lt;br /&gt; இவ்வளவே&lt;br /&gt; இருந்துவிட்டுப் போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; கருப்பு-வெள்ளை&lt;br /&gt; இடம் மாறினாலோ,&lt;br /&gt; கருப்பின் வீரியம்&lt;br /&gt; குறைந்தாலோ,&lt;br /&gt; கருப்பை வெள்ளை&lt;br /&gt; ஆக்கிரமித்தாலோ&lt;br /&gt; பாதிக்கப்படுவது&lt;br /&gt; உங்கள் பார்வைதான்.&lt;br /&gt;&lt;br /&gt; உள்ளாடை வெள்ளையாய்,&lt;br /&gt; வெளியாடை கருப்புமாய்ப் &lt;br /&gt; போகும் ஒருவன்&lt;br /&gt; உள்ளாடை கருப்பாய்,&lt;br /&gt; வெளியாடை வெள்ளையுமாய்ப்&lt;br /&gt; போகிறவனைப் பார்த்து&lt;br /&gt; முட்டாள் என்று &lt;br /&gt; சொன்ன கதையாய்...................&lt;br /&gt;&lt;br /&gt; அட!&lt;br /&gt; எங்கே போனார்&lt;br /&gt; இந்த யோகி?&lt;br /&gt;&lt;br /&gt; சரி!&lt;br /&gt; ஒன்று மட்டும்&lt;br /&gt; ஞாபகம் செய்கிறேன்.&lt;br /&gt; வெள்ளை என்பதில் &lt;br /&gt; எல்லா நிறங்களும் உண்டு.&lt;br /&gt; கருப்பு என்பது தனி.&lt;br /&gt;&lt;br /&gt; நீங்கள் செய்யும்&lt;br /&gt; அர்ப்பணிப்புகளும்,&lt;br /&gt; அன்பளிப்புகளும்,&lt;br /&gt; ஆதரவுகளும்,&lt;br /&gt; கரகோஷங்களும்,&lt;br /&gt; நன்கொடைகளும்,&lt;br /&gt; நிவாரண உதவிகளும்&lt;br /&gt; வெள்ளைகளுக்கு&lt;br /&gt; என்றாகும் போது..........&lt;br /&gt; நீங்கள் நினைப்பதுபோல்&lt;br /&gt; கருப்பென்பது&lt;br /&gt; வெள்ளையின் &lt;br /&gt; ஒரு பிசிரல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர் (போகி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21903097-113989560770912488?l=jsgnanasekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jsgnanasekar.blogspot.com/feeds/113989560770912488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21903097&amp;postID=113989560770912488' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113989560770912488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113989560770912488'/><link rel='alternate' type='text/html' href='http://jsgnanasekar.blogspot.com/2006/02/blog-post_13.html' title='நள்ளிரவில் சூரியன்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21903097.post-113980109850134881</id><published>2006-02-12T19:20:00.000-08:00</published><updated>2006-02-12T19:36:37.940-08:00</updated><title type='text'>தழும்பில் + ஆதவன் = தழும்பில்லாதவன்</title><content type='html'>சமர்ப்பணம் : பாவங்களைப் பணத்தால் சமப்படுத்துபவர்களுக்காக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குதிகாலில்&lt;br /&gt;அரை அங்குலம் வெட்டி&lt;br /&gt;கொட்டும் குருதி துடைத்து&lt;br /&gt;உப்பைத் தூவி&lt;br /&gt;நெருப்பில் காயம் காட்டிக்கொண்டிருந்தான்&lt;br /&gt;போகி.&lt;br /&gt;&lt;br /&gt;தியானம் முடித்து&lt;br /&gt;காயகல்பம் உபதேசம் செய்ய&lt;br /&gt;கானகம்விட்டு ஊர்வந்தபோது&lt;br /&gt;போகியின் காயம் பார்த்து&lt;br /&gt;கடவுளாய் நின்றான்.&lt;br /&gt;சரி.....சரி......&lt;br /&gt;கல்லாய் நின்றான்&lt;br /&gt;யோகி.&lt;br /&gt;&lt;br /&gt;யோகியே கேட்டான்&lt;br /&gt; ஏன்&lt;br /&gt; காயம் செய்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; இல்லை&lt;br /&gt; சிகிச்சை செய்கிறேன்.&lt;br /&gt; ஒரே தவறை&lt;br /&gt; மீண்டும் மீண்டும் செய்யும்&lt;br /&gt; இந்தக் கால்களுக்கு&lt;br /&gt; இதுவரை தவறியதற்கு&lt;br /&gt; இரத்தமும்,&lt;br /&gt; இனிமேல் &lt;br /&gt; தவறாமல்&lt;br /&gt; தவறாமலிருக்க&lt;br /&gt; வலியும்&lt;br /&gt; நான் தரும் சிகிச்சைகள்.&lt;br /&gt; இரத்தம்&lt;br /&gt; எனக்கு முதலுதவி.&lt;br /&gt; வலி&lt;br /&gt; எனக்கு தடுப்பு மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; முதலுதவி என்ற பெயரில்&lt;br /&gt; ஊனம் செய்கிறாயே?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; சர்க்கரை வியாதி வந்தால்&lt;br /&gt; உங்கள் காலை&lt;br /&gt; நீங்களே வெட்டி&lt;br /&gt; ஊனம் செய்வதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; குட்டிப் பையனையும்,&lt;br /&gt; குண்டு மனிதனையும்&lt;br /&gt; சோதனை செய்ய&lt;br /&gt; நா(கசா)சி சிறுத்தவர்களை&lt;br /&gt; நீங்கள் குள்ளமாக்கிப் போனது&lt;br /&gt; நினைவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; 'உழவனின் நண்பன் போ(பா)ல்,'&lt;br /&gt; எனச் சொல்லிக்கொண்டு&lt;br /&gt; அனைவரையும் நீங்கள்&lt;br /&gt; குருடாக்கிப் போனதை&lt;br /&gt; மறந்துபோனீரா?&lt;br /&gt;&lt;br /&gt; ஆயுதம் இருப்பதாகச் சொல்லி&lt;br /&gt; எண்ணெய் தோண்டப்போய்&lt;br /&gt; 'குறி'வைத்து&lt;br /&gt; ஊனமாக்கியதை நீங்கள்&lt;br /&gt; குறித்துக் கொள்ளவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; நீங்கள் பலசாலிகளாக&lt;br /&gt; நாட்டையும்,&lt;br /&gt; சில கோயில்களையும்,&lt;br /&gt; தாய்மொழியையும்&lt;br /&gt; உடைத்துப் போட்டதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; இவ்வளவு நல்லவன்&lt;br /&gt; இவ்வுலகுக்கு வேண்டாம் என்று&lt;br /&gt; இவ்வளவு காலமாய்&lt;br /&gt; எவ்வளவு பேர் உயிரை&lt;br /&gt; உரித்திருப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt; இப்படி&lt;br /&gt; நீங்கள் செய்யும் ஊனங்கள்&lt;br /&gt; மற்றவர் உடம்பில்&lt;br /&gt; என்று ஆகும்போது,&lt;br /&gt; என் குற்றம் மறக்க&lt;br /&gt; என் கால் காயத்தில்&lt;br /&gt; நான் எடுக்கும் ரத்தம்&lt;br /&gt; எப்படி என்னை ஊனம் செய்யும்?&lt;br /&gt;&lt;br /&gt;யோகி சொன்னான்.&lt;br /&gt; காயமும் செய்வாயாம்.&lt;br /&gt; தடுப்பும் செய்வாயாம்.&lt;br /&gt; உன் தடுப்பு மருந்தே&lt;br /&gt; தடுக்கப்பட வேண்டுமே.&lt;br /&gt; உன் தடுப்பு மருந்து &lt;br /&gt; வலியின் &lt;br /&gt; காயத்தின் &lt;br /&gt; ஊக்கமருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; அம்மைக்காயம் பார்க்கும்போது&lt;br /&gt; இனி&lt;br /&gt; அம்மா விளையாடாது என&lt;br /&gt; நீங்கள் சந்தோஷப்படுவதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; யாரோ ஒருவரின்&lt;br /&gt; ஐந்து காயங்கள்&lt;br /&gt; உங்கள் பாவம் போக்கிவிட்டதாக&lt;br /&gt; உண்டியல் காசு போடுவதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; சீல் வடியும் &lt;br /&gt; புண்ணாய் இருந்தாலும்&lt;br /&gt; உங்கள் பசி போக்க&lt;br /&gt; நீங்கள் தாய் மார்பு&lt;br /&gt; கடிப்பதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; பூமியைக் காயம் செய்து&lt;br /&gt; பயிரும், பொன்னும், கரியும்&lt;br /&gt; நீங்கள் எடுப்பதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; நீங்கள் சொர்க்கம் போக&lt;br /&gt; காதைக் காயமாக்கிக் &lt;br /&gt;      கொள்வதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; தளர்ந்த நரம்புகள் &lt;br /&gt; உயிர்த்தெழும்போது&lt;br /&gt; விரல்கள் முன்னிரவில் செய்த&lt;br /&gt; தேகப் பயிற்சிகளை&lt;br /&gt; உங்கள் அந்தரங்கக் காயங்கள்&lt;br /&gt; வெட்கப்படுத்திப் போவதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; தொப்புள்கொடி காயம் செய்து&lt;br /&gt; நீங்கள் சுதந்திரமாவதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; இப்படி&lt;br /&gt; நீங்கள் செய்யும் காயங்களெல்லாம்&lt;br /&gt; உங்கள் அற்ப ஆறுதல்களை&lt;br /&gt; ஞாபகப்படுத்தும்&lt;br /&gt; அடையாளங்களாகப் போனபோது&lt;br /&gt; என் வக்கிரங்களையும்&lt;br /&gt; மனித சமுதாயத்தில் தண்டனைகளற்ற&lt;br /&gt; நான் செய்த சில குற்றங்களையும்&lt;br /&gt; ஞாபகப்படுத்தி,&lt;br /&gt; 'மனிதன் வக்கிரமானவன்' என&lt;br /&gt; அடையாளம் காட்டும் &lt;br /&gt; என் காயங்களில் ஏது தவறு?&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; தண்டனைகளற்ற &lt;br /&gt; தவறுகளுக்கெல்லாம்&lt;br /&gt; காயம்தான் சுயதண்டனை என்றால்&lt;br /&gt; தழும்புகளால் எலும்பு&lt;br /&gt; போர்த்தப்படாதா?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; அரபு நாடுகளில் கற்பழிப்பும்,&lt;br /&gt; சிங்கப்பூரில் சுத்தமின்மையும்&lt;br /&gt; அபூர்வம் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt; அதனால்தான் சொல்கிறேன்.&lt;br /&gt; உங்கள் தண்டனைகள்&lt;br /&gt; உங்கள் தவறுகளைப் போல்&lt;br /&gt; கொடுமையாக இருந்தால்&lt;br /&gt; ஒவ்வொரு உறுப்பும்&lt;br /&gt; அதிகபட்சம்&lt;br /&gt; ஒரு தழும்பே பெற்றிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; தழும்புகள் செய்வது&lt;br /&gt; வக்கிரமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; குற்றங்கள் &lt;br /&gt; தண்டிக்கப்படாத போதுதான்&lt;br /&gt; நீங்கள் வக்கிரமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இதற்கொரு உதாரணம் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt; சுனாமி நிவாரணத்தில்&lt;br /&gt; பிணங்களைக் காயப்படுத்தியதை&lt;br /&gt; வக்கிரம் என்று சொன்ன&lt;br /&gt; உங்களில் சிலர்தான்&lt;br /&gt; அதே நிவாரணத்தில்&lt;br /&gt; பொதுப்பணி என்ற பெயரில்........ &lt;br /&gt;&lt;br /&gt; அட!&lt;br /&gt; எங்கே போனார் &lt;br /&gt; இந்த யோகி?&lt;br /&gt;&lt;br /&gt; யானைத் தலையனின்&lt;br /&gt; கழுத்துக் காயங்கள் தெரிந்திருந்தாலும்&lt;br /&gt; அவன் வக்கிரங்கள்&lt;br /&gt; நாம் மறந்தே போனோம்!&lt;br /&gt;&lt;br /&gt; சூரியனைத் தினம் பார்த்தாலும்&lt;br /&gt; ஆசை தழும்பி அவன்&lt;br /&gt; ஆயிரம் தழும்புகளால்&lt;br /&gt; பிளக்கப்பட்டதையும்&lt;br /&gt; நாம் மறந்தே போனோம்!&lt;br /&gt;&lt;br /&gt; அப்படி ஒருநாள்&lt;br /&gt; நம் தவறுகள்&lt;br /&gt; மறக்கப்படும் வரை&lt;br /&gt; தவறாமல்&lt;br /&gt; காயம் செய்வோம்!&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர் (போகி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21903097-113980109850134881?l=jsgnanasekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jsgnanasekar.blogspot.com/feeds/113980109850134881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21903097&amp;postID=113980109850134881' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113980109850134881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113980109850134881'/><link rel='alternate' type='text/html' href='http://jsgnanasekar.blogspot.com/2006/02/blog-post_12.html' title='தழும்பில் + ஆதவன் = தழும்பில்லாதவன்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21903097.post-113954446642459465</id><published>2006-02-09T19:53:00.000-08:00</published><updated>2006-02-09T20:09:44.860-08:00</updated><title type='text'>கனவுக்கன்னி</title><content type='html'>சமர்ப்பணம் : முகம் பார்த்து, பெயர் பார்த்து, ஏதேதோ பார்த்து காதலிக்கும் காதல்களுக்கு நடுவே, உடம்பைப் பற்றிக் கவலைப்படாத ஒரு வித்தியாசமான கனவுக்கன்னியைக் காதல் செய்பவர்களுக்காக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; தாயுடன் தகராறு செய்த நீ&lt;br /&gt; காதலித்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; கனவு காண்பதுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;போகி இன்னும் சொன்னான்.&lt;br /&gt; கடவுள் என்னும் கற்பனையில்&lt;br /&gt; கல்லாய் வாழ்வதில்லை நான்&lt;br /&gt; காதல் என்னும் கற்பனையில்&lt;br /&gt; சிற்பமாய்ச் செதுக்கிக் கொள்கிறேன்&lt;br /&gt; என்னையே நான்!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; யார் அவள்?&lt;br /&gt; செங்கோல் தேவையான இந்நேரத்தில்&lt;br /&gt; கொடுங்கோல் ஆதரிப்பவள்.&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; கொடுங்கோலன் என்று நீங்கள் சொன்ன&lt;br /&gt; ஹிட்லரைக்கூட&lt;br /&gt; நீங்கள் சொல்லும் செங்கோலனாக&lt;br /&gt; மாற்றப்போன ஈவா ப்ரான் அவள்!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; ஓ! அப்படியானால்&lt;br /&gt; ரகசியக் காதலோ?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; ரகசியமாய் செய்ய&lt;br /&gt; மனிதர் செய்யும்&lt;br /&gt; தாம்பத்தியக் காதலில்லை இது!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; முதல் பார்வையிலேயே காதலோ?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; இல்லை.&lt;br /&gt; மூன்று 'கேள்வி'யில் காதல்!&lt;br /&gt;&lt;br /&gt;போகி மேலும் சொன்னான்.&lt;br /&gt; தாய் சொல்வதுண்டு&lt;br /&gt; நான் பிறந்தபோது&lt;br /&gt; பக்கத்துக் கட்டிலில்&lt;br /&gt; அவளும் பிறந்தாளாம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒருநாள் &lt;br /&gt; நாயுடன் வலம்வந்த அவள்&lt;br /&gt; தவறாக நுழைந்தாளாம்&lt;br /&gt; எங்கள் வீட்டில்!&lt;br /&gt; வீட்டில் கும்பலைப் பார்த்து&lt;br /&gt; பயந்து 'போய்'விட்டாளாம்!&lt;br /&gt;&lt;br /&gt; அப்புச்சி இறந்த மறுநாளில்&lt;br /&gt; குளத்தில் நான் குளிக்க&lt;br /&gt; முகங்கள் தெரியாத இடைவெளியில்&lt;br /&gt; அக்கரையிலிருந்து&lt;br /&gt; அழைத்தாள் அவள்!&lt;br /&gt; நீச்சல் தெரியாமல் &lt;br /&gt; நான் முழிக்க&lt;br /&gt; முடியை இழுத்து&lt;br /&gt; கண்டித்தார் சித்தப்பா!&lt;br /&gt;&lt;br /&gt; இப்படி&lt;br /&gt; மூன்றுமுறை தற்செயலாக &lt;br /&gt; நாங்கள் நெருங்கியும்&lt;br /&gt; நாங்கள் பார்த்துக் கொண்டதேயில்லை!&lt;br /&gt;&lt;br /&gt; பாட்டிதான் சொன்னாள் &lt;br /&gt; அவளைப்பற்றி&lt;br /&gt; அரைகுறையாக,&lt;br /&gt; இலைமறை காயாக!&lt;br /&gt;&lt;br /&gt; எங்கள் வீட்டிற்கு வேண்டுமென்றே&lt;br /&gt; அவள் வந்திருக்கிறாள்&lt;br /&gt; மூன்றுமுறை!&lt;br /&gt; ஒருமுறை அத்தையின் தலைப்பிரசவத்திற்கு,&lt;br /&gt; ஒருமுறை தாத்தாவைப் பார்க்க,&lt;br /&gt; கடைசியாக விபத்துக்குள்ளான பாட்டியைப் பார்க்க.....&lt;br /&gt;&lt;br /&gt; யாரும் அவளை எங்கள் வீட்டில்&lt;br /&gt; முழுமையாகப் பார்த்ததில்லை!&lt;br /&gt; யாரும் அவளை&lt;br /&gt; எங்கள் வீட்டிற்கு அழைப்பதுமில்லை!&lt;br /&gt; இருந்தாலும் வருவாள்&lt;br /&gt; ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு!&lt;br /&gt; ஏனோ தெரியவில்லை&lt;br /&gt; அவள் முகத்தை என்னிடம் மட்டும்&lt;br /&gt; காட்டியதேயில்லை!&lt;br /&gt;&lt;br /&gt; அவள் வந்தால் &lt;br /&gt; ஒரு கூட்டத்தைச் சிரிக்க வைப்பாள்&lt;br /&gt; ஒரு கூட்டத்தை அழவைப்பாள்!&lt;br /&gt; என்னைப் போலவே&lt;br /&gt; முரண்பாடுடையவள்!&lt;br /&gt;&lt;br /&gt; அவளை &lt;br /&gt; அங்கே பார்த்ததாகவும்,&lt;br /&gt; இங்கே பார்த்ததாகவும்&lt;br /&gt; பலர் சொல்வதுண்டு!&lt;br /&gt; என்னுடன் பிறந்தபோதே&lt;br /&gt; நான் கேட்டிருந்தால்&lt;br /&gt; என்னிடம் காட்டமாட்டாள் &lt;br /&gt; இப்படி பூச்சாண்டி!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt; பார்க்காமலே காதலோ?&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; நான் அவளைப் பார்த்ததில்லை.&lt;br /&gt; என்னை அவள் பார்ப்பதை &lt;br /&gt; நான் பார்த்ததில்லை&lt;br /&gt; மூன்றுமுறை!&lt;br /&gt;&lt;br /&gt; முதல்முறை&lt;br /&gt; வீட்டு மொட்டைமாடியில்&lt;br /&gt; முகத்திற்கெதிரே&lt;br /&gt; பல்பு வெடிக்கையில்&lt;br /&gt; முகம்மூடிக்கொண்டு&lt;br /&gt; கீழிறங்கப் பார்த்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt; மறுமுறை&lt;br /&gt; காவிரியின் ஓர் அணைக்கட்டில்&lt;br /&gt; கால்தவறி வழுக்கி விழுகையில்&lt;br /&gt; தண்ணீருக்குள் &lt;br /&gt; அவள் பாதம் பார்த்தேன்!&lt;br /&gt; எழுந்து பார்த்தால்&lt;br /&gt; நண்பர்கள் சுற்றி&lt;br /&gt; அவளைத் தப்பவிட்டனர்!&lt;br /&gt;&lt;br /&gt; கடைசியாக&lt;br /&gt; வங்கக்கடலின் தென்கரையில்&lt;br /&gt; தூக்கி வீசிய ஓரலையில்&lt;br /&gt; எனக்கும், சித்திரம் தாங்கிய ஒன்றிற்கும்&lt;br /&gt; இடையே அவள் இடையைப் பார்த்தேன்!&lt;br /&gt; இடைபற்றிய &lt;br /&gt; கரங்கள் விலக்கி&lt;br /&gt; நடுக்கடல் நீந்திப்போனாள்!&lt;br /&gt;&lt;br /&gt; அதன்பின் அவளைப்&lt;br /&gt; பார்க்க முயற்சித்தேன்&lt;br /&gt; மூன்றுமுறை!&lt;br /&gt; மூன்றும் தோல்வி!&lt;br /&gt;&lt;br /&gt; முதல்முறை&lt;br /&gt; சென்ற நூற்றாண்டின் கடைசிநாள்.&lt;br /&gt; எனக்கு வயது போதாதென்று&lt;br /&gt; மனக்கதவிடுக்கில் &lt;br /&gt; சொல்லி மறைந்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt; மறுமுறை&lt;br /&gt; இந்நூற்றாண்டின் முதல் கிறிஸ்மஸ்.&lt;br /&gt; சுற்றி என்னைத் தேடாதே&lt;br /&gt; கற்றுச் சுற்றம் பாரென&lt;br /&gt; தெருவில் கூவிச் சென்றாள்!&lt;br /&gt;&lt;br /&gt; கடைசியாக&lt;br /&gt; இந்நூற்றாண்டின் &lt;br /&gt; முதல் லீப் ஆண்டின்&lt;br /&gt; கடைசி பவுர்ணமி.&lt;br /&gt; திருத்தலப் பயணம் ரத்துசெய்து&lt;br /&gt; இம்முறை இல்லையேல்&lt;br /&gt; இனியில்லை இவளென முடிவெடுத்தென்.&lt;br /&gt; திரையரங்கின் இருட்டில்&lt;br /&gt; ரகசியம் சொல்கிறேன் &lt;br /&gt; வாவென்றாள் கனவில் வந்து.&lt;br /&gt; படம் முடிந்தது.&lt;br /&gt; அவளின் ஆரம்பமேயில்லை.&lt;br /&gt; வெளியே வந்தால்&lt;br /&gt; ஊரெல்லாம் அவளைப் பற்றிய பேச்சு.&lt;br /&gt; திருத்தலம் திசைமாற்றி&lt;br /&gt; திரையரங்கில் திகைக்கச் செய்து&lt;br /&gt; இருபத்தோராண்டு தேடும் &lt;br /&gt; என்னை ஏமாற்றி&lt;br /&gt; இருபத்தோராம் நூற்றாண்டையே&lt;br /&gt; அவள் நினைப்பில் மூழ்கவைத்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி சொன்னான்.&lt;br /&gt; நடத்தை கெட்டவள்&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னாள்.&lt;br /&gt; பெண்ணின் மரியாதை குறைக்க&lt;br /&gt; சமுதாயம் எடுக்கும் ஒரே ஆயுதம்&lt;br /&gt; 'அவள் நடத்தை கெட்டவள்'&lt;br /&gt; என்ற பட்டம்.&lt;br /&gt; ஆனால் நான் சொல்வேன்&lt;br /&gt; 'அவள் நடத்தை கெடுப்பவள்'&lt;br /&gt; உங்கள் நடத்தைகள்&lt;br /&gt; கெட்டவைகளாய்ப் போனபோது&lt;br /&gt; அதைக் கெடுப்பவள்&lt;br /&gt; எப்படி கெட்டவளாய்ப் போக முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt; முசோலினியை நடுரோட்டில் &lt;br /&gt; தலைகீழாகத் தொங்கவிட்டது&lt;br /&gt; உங்கள் நடத்தைதானே?&lt;br /&gt; அந்தக் கூட்டத்திலும்&lt;br /&gt; 'மனிதனை மதிக்காமல்&lt;br /&gt; பிணத்தை மதித்து'&lt;br /&gt; முசோலினியின் காதலியின்&lt;br /&gt; பாவாடை சரிசெய்தாளாம் ஒருத்தி! &lt;br /&gt;&lt;br /&gt; நீங்களோ&lt;br /&gt; என்னைக் கொன்றுவிட்டீர்கள்&lt;br /&gt; உங்கள் வார்த்தைகளால்.......&lt;br /&gt; தலைகீழாகத் தொங்கவிட்டீர்கள்&lt;br /&gt; உங்கள் கட்டுப்பாடுகளால்......&lt;br /&gt; நடுரோட்டில் வதைத்தீர்கள்&lt;br /&gt; உங்கள் நம்பிக்கைகளால்...&lt;br /&gt; அதனால்தான் தேடுகிறேன் ஒருத்தியை!&lt;br /&gt; உங்கள் பாஷையில் 'கனவுக்கன்னி'யை!&lt;br /&gt;&lt;br /&gt; கண்ணை மூடிக்கொண்டு&lt;br /&gt; கண்டவர்மேல் கனல் ஏவும்&lt;br /&gt; கட்டுப்பாடற்ற&lt;br /&gt; கண்ணகி வேண்டாம் எனக்கு!&lt;br /&gt; என் மானத்தை&lt;br /&gt; அவள் மானத்தால்&lt;br /&gt; பூட்டிவைக்கும்&lt;br /&gt; ஒரு மாதவி வேண்டும் எனக்கு!&lt;br /&gt;&lt;br /&gt; முகவெட்டு&lt;br /&gt; இன்னும் பல வெட்டுகளைப் பார்த்து&lt;br /&gt; காதலிக்கும் இவ்வுலகில்&lt;br /&gt; என் மனவெட்டுகளுக்கு&lt;br /&gt; மருந்தாக வேண்டும் அவள்!&lt;br /&gt;&lt;br /&gt; எத்தனை பேருடன் அவள்&lt;br /&gt; 'உறவு' கொண்டாலும்&lt;br /&gt; எனக்குக் கவலையில்லை......&lt;br /&gt; ஆனாலும் ஒருமுறை&lt;br /&gt; கண்டிப்பாக அவளுடன்.....&lt;br /&gt;&lt;br /&gt; எத்தனை ஆண்(தேனீக்)களுடன்&lt;br /&gt; அவள் உறவு கொண்டாலும்&lt;br /&gt; எனக்குக் கவலையில்லை!&lt;br /&gt; அந்த ராணி(தேனீ)யின்&lt;br /&gt; ஒருநாள் உறவுக்காக&lt;br /&gt; வாழ்நாள்வரை காத்திருப்பேன்!&lt;br /&gt;&lt;br /&gt; இருந்தாலும் ஒரு சின்ன கோபம்&lt;br /&gt; இவ்வளவு தூரம் வந்தவள்&lt;br /&gt; என்னைப் பார்க்காமல்&lt;br /&gt; போய்விட்டாளென்று.........&lt;br /&gt;&lt;br /&gt;யோகி சொன்னான்.&lt;br /&gt; இங்கே முகம் தெரிந்த &lt;br /&gt; காதல்களே சேர்வதில்லை.....&lt;br /&gt; .&lt;br /&gt; .&lt;br /&gt; .&lt;br /&gt; அது சரி அப்புறம்.......&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; ஒதுக்கப்பட்டவனாய்&lt;br /&gt; அமர்ந்தேன் தனியறையில்.&lt;br /&gt; கொஞ்சம் ஒதுக்கி வைத்தேன்&lt;br /&gt; ஆறாம் அறிவை.&lt;br /&gt; மனிதனாய் இல்லாமல் யோசித்தேன்&lt;br /&gt; புரிந்தது உண்மை.&lt;br /&gt; கனவுக்கன்னியும்&lt;br /&gt; மோசமான ஆசான் தான்&lt;br /&gt; அவளைப் பற்றிய&lt;br /&gt; அனுபவமில்லாமல்&lt;br /&gt; அனுபவித்து&lt;br /&gt; அனுபவித்தபின்&lt;br /&gt; அனுபவம் சொல்வதற்குள்&lt;br /&gt; அனுசரனை காட்ட மறுப்பவள்!&lt;br /&gt; பிறகுதான் தெளிந்தேன்&lt;br /&gt; கனவுக்கன்னியைத் தேடுவது&lt;br /&gt; அறிவீனமென்று!&lt;br /&gt; ஆனாலும்&lt;br /&gt; அவளை&lt;br /&gt; நான் மறந்த ஒரு நாளில்&lt;br /&gt; நிச்சயம் வருவாள்&lt;br /&gt; என்னைத்தேடி!&lt;br /&gt;&lt;br /&gt; என்முன் அவள்&lt;br /&gt; இடையில்லாமல் பாவாடைகட்டி&lt;br /&gt; 'பிரசன்னா'மாகும் வேளையில்&lt;br /&gt; அவள்தான் எல்லாம் எனக்கு&lt;br /&gt; என்றான பிறகு&lt;br /&gt; 'சத்தியா'மாகச் சொல்கிறேன்&lt;br /&gt; (சு)மதி, வான்(மதி),&lt;br /&gt; அடைக்கலம், ஆரோக்கியா, ஐஸ்(வர்யா),&lt;br /&gt; பல்லவி, அஞ்சலி, ஜோதி, &lt;br /&gt; தீபா(ம்), கீதா(ம்), சங்(க்)கீதம்,&lt;br /&gt; ரோஜா, புஷ்பம், சோபியா,&lt;br /&gt; சாந்தி, கமலா&lt;br /&gt; இதுபோன்ற மானுடப் 'பிறவி'கள்&lt;br /&gt; 'பிரியா'க் கிடைத்தாலும் ஏற்கமாட்டேன்.&lt;br /&gt; ஆண்டாண்டுகாலமாய் அழுதுபுரண்டாலும் கூட!&lt;br /&gt;&lt;br /&gt; நான் பிறந்தபோது&lt;br /&gt; என் தாயை நலம் விசாரித்த&lt;br /&gt; என் கனவுக்கன்னி,&lt;br /&gt; என்னைப் பிடிப்பதாகச் சொல்லும்&lt;br /&gt; அந்த ஒரு நாளில்&lt;br /&gt; அவளைப் பிடிப்பதாகச் சொல்ல&lt;br /&gt; எனக்குத் தைரியமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt; அந்த ஒரு நாளில்....&lt;br /&gt;&lt;br /&gt; அட!&lt;br /&gt; எங்கே போனார்&lt;br /&gt; இந்த யோகி?&lt;br /&gt;&lt;br /&gt; மரணதேவதை!&lt;br /&gt; உன்னைப் பற்றிய &lt;br /&gt; நினைவுகளைப் பகிரவே &lt;br /&gt; யாரும் தயாரில்லை.&lt;br /&gt; ஆதலால்&lt;br /&gt; காதலிப்பேன் உன்னை.&lt;br /&gt; என்னிடம் நீ&lt;br /&gt; காதல் சொல்லும் மட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர்(போகி)&lt;br /&gt;&lt;br /&gt;(காதலி சந்திக்காத வரையில் போகிகள் சாவதில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21903097-113954446642459465?l=jsgnanasekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jsgnanasekar.blogspot.com/feeds/113954446642459465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21903097&amp;postID=113954446642459465' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113954446642459465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113954446642459465'/><link rel='alternate' type='text/html' href='http://jsgnanasekar.blogspot.com/2006/02/blog-post_113954446642459465.html' title='கனவுக்கன்னி'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21903097.post-113948210705625886</id><published>2006-02-09T02:40:00.000-08:00</published><updated>2006-02-09T03:33:29.436-08:00</updated><title type='text'>பெறுநர் : தாயுமானவள்</title><content type='html'>சமர்ப்பணம் : சிவனின் வேலையையும் சேர்த்து செய்யும் பிரம்மாக்களுக்காக....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலைப் பற்றி&lt;br /&gt;கவிதை எழுதி&lt;br /&gt;கல்லடி வாங்கி&lt;br /&gt;காட்டுக்குள் திரிந்து&lt;br /&gt;யோகியைத் தேடினான் போகி.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மரத்தடியில் யோகி.&lt;br /&gt;&lt;br /&gt;யோகியின் தியானம் கலைத்து&lt;br /&gt;யோசிக்கச் சொன்னான்&lt;br /&gt;போகி.&lt;br /&gt; உலகிலேயே  உயர்ந்த&lt;br /&gt; உறவு எது?&lt;br /&gt;&lt;br /&gt;யோகி சொன்னான்.&lt;br /&gt; பட்டினத்தாரையும் பதறவைத்த&lt;br /&gt; அம்மாவின் அந்தமும்&lt;br /&gt; தாயின் தலையும்&lt;br /&gt; சேர்ந்து ஆன&lt;br /&gt; மாதா!&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt; அம்மா என்ற பதத்தை&lt;br /&gt; வடக்கே ஒருத்தரும்,&lt;br /&gt; மாதா என்ற பதத்தை&lt;br /&gt; மேற்கே ஒருத்தரும்&lt;br /&gt; சொந்தமாக்கிக் கொண்டதால்&lt;br /&gt; தாய் என்றே&lt;br /&gt; சுருங்கச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள்&lt;br /&gt; தாய்ப் பாசத்துடன்&lt;br /&gt; தகராறு செய்யவே&lt;br /&gt; தலைதெறிக்க ஓடிவந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; விதிகளைப் பார்த்து&lt;br /&gt; வியந்தது போதும்&lt;br /&gt; விதிவிலக்குகளைக் கொஞ்சம்&lt;br /&gt; விலக்கப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; தாய்ப் பாசத்திற்குப்&lt;br /&gt; பகைவர் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt; முதலாம் எதிரி-பதிபக்தி.&lt;br /&gt;&lt;br /&gt; கண்ணற்ற கணவனுக்காகக்&lt;br /&gt; கண்கள்கட்டிக் காணமறுத்த&lt;br /&gt; காவியப்பெண்ணின்&lt;br /&gt; காலடித்தொடர்பவர்கள்&lt;br /&gt; கலியுக மனைவிகள்!&lt;br /&gt;&lt;br /&gt; கட்டியவன் வேண்டுமா&lt;br /&gt; கருவறையில் வசித்தவர்கள் வேண்டுமா என்றால்&lt;br /&gt; கருவறையையும் உயிரறையாக்கும்&lt;br /&gt; கணவனே கண்கண்ட&lt;br /&gt; கடவுள் என்பார்கள்.....&lt;br /&gt; உயிரைச் சமன்படுத்தத் தெரியாத&lt;br /&gt; ஆறறிவுக்காரிகள்!&lt;br /&gt;&lt;br /&gt; தாலியால் ஏன்&lt;br /&gt; தாய்ப்பாசத்திற்கு&lt;br /&gt; வேலி போட்டீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt; சாட்சிகள் இருந்தும்&lt;br /&gt; சாட்சிகள் இல்லா&lt;br /&gt; தாம்பத்தியம்&lt;br /&gt; தாய்ப் பாசத்தைத்&lt;br /&gt; தோற்கடிப்பதெப்படி?&lt;br /&gt;&lt;br /&gt; உண்மைதான் சொல்கிறேன்&lt;br /&gt; ஆறு பிள்ளைகள் பெற்றும்&lt;br /&gt; ஆறும்&lt;br /&gt; அடுத்த வேளை கஞ்சிக்கே&lt;br /&gt; அவதிப்பட&lt;br /&gt; அடுத்த வாரிசு தேடும்&lt;br /&gt; அதிசயப் பிறவிகளை&lt;br /&gt; அன்றாடம் பார்க்கிறேன்&lt;br /&gt; அரசமரத்தடியில்!&lt;br /&gt;&lt;br /&gt; இரண்டாம் எதிரி-கற்பு என்னும் ஒருபால் கட்டுப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt; நான் நினைக்கிறேன்&lt;br /&gt; குந்திராணிதான்&lt;br /&gt; துவங்கி வைத்திருப்பாள்.&lt;br /&gt; இன்று&lt;br /&gt; பல குந்திராணிகள்&lt;br /&gt; கற்பைச் சுத்தப்படுத்த&lt;br /&gt; கர்ணன்களைப்&lt;br /&gt; குப்பைகளாகப் போடுகின்றனர்&lt;br /&gt; தொட்டிகளில்!&lt;br /&gt;&lt;br /&gt; அது ஒரு விபத்து,&lt;br /&gt; ஏமாற்றப்பட்டேன்,&lt;br /&gt; நாளாகிவிட்டது,&lt;br /&gt; கல்யாணம் நெருங்குகிறது,&lt;br /&gt; எதிர்பார்க்கவே இல்லை,&lt;br /&gt; சில்லறை இல்லை&lt;br /&gt; இப்படி&lt;br /&gt; ஏதோ ஒரு&lt;br /&gt; காரணம் சொல்லித்&lt;br /&gt; தப்பித்துக் கொள்ளலாம்&lt;br /&gt; இன்றைய குந்திராணிகள்!&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால்&lt;br /&gt; பிச்சைத் தொழில்,&lt;br /&gt; அனாதை ஆசிரமம்,&lt;br /&gt; தத்துப்பிள்ளை,&lt;br /&gt; பாலியல் தொழில்,&lt;br /&gt; உறுப்புக் கடத்தல்&lt;br /&gt; இவற்றில்&lt;br /&gt; ஏதேனும் ஒன்றில்&lt;br /&gt; மாட்டிக்கொள்கிறார்கள்&lt;br /&gt; இன்றைய கர்ணன்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; இதற்குப் பெயர்தான்&lt;br /&gt; ஜென்மப் பாவமா?&lt;br /&gt;&lt;br /&gt; அடுத்த எதிரி-வறுமை.&lt;br /&gt; &lt;br /&gt; இன்னும்கூட &lt;br /&gt; செய்திகள் சொல்கின்றன&lt;br /&gt; சாம்பார்சட்டியிலும்,&lt;br /&gt; நெல்லிலும்,&lt;br /&gt; கள்ளிப்பாலிலும்&lt;br /&gt; கொல்லப்படுகின்றன&lt;br /&gt; பெண்சிசுக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் தாய்ப்பாசம்&lt;br /&gt; நினைத்திருந்தால்&lt;br /&gt; தடுத்திருக்கலாமே?&lt;br /&gt; முடியாவிட்டால்&lt;br /&gt; அடுத்த சிசுவைத்&lt;br /&gt; தடுத்திருக்கலாமே?&lt;br /&gt; ஆனால்&lt;br /&gt; பெருமையாகச் சொல்லிக் கொள்ளுங்கள்&lt;br /&gt; 'பிரசவம்' என்று!&lt;br /&gt;&lt;br /&gt; பாவம்&lt;br /&gt; பாலியல் தொழில் பெண்கள்!&lt;br /&gt; அவர்கள்&lt;br /&gt; ஆண்சிசுவையும் கொல்வதுண்டு!&lt;br /&gt; தொழிலுக்குத் தடையாய்ப் போனதால்!&lt;br /&gt;&lt;br /&gt; ஆதலால் சொல்கிறேன்&lt;br /&gt; "ஈன்றாள் பசிகாண்பா ளாயினும் செய்யற்க&lt;br /&gt;  சான்றோர் பழிக்கும் வினை"&lt;br /&gt; எனக் குறளிட்டது போதும்&lt;br /&gt; 'அன்பாராய்தல்' என &lt;br /&gt; ஓர் அதிகாரமிட்டு&lt;br /&gt; முதல் குறளாய் எழுதுங்கள்.....&lt;br /&gt; "அகப்பை பசிகாண்ப தாயினும் செய்யற்க&lt;br /&gt;  மக்கள் பாதிக்கும் வினை"&lt;br /&gt;&lt;br /&gt;யோகி சீறினான்.&lt;br /&gt; போதும் நிறுத்து!&lt;br /&gt; பத்துத் திங்கள்&lt;br /&gt; சுமந்து பெற்றெடுக்கும்&lt;br /&gt; தாய்ப்பாசத்தின் அருமை&lt;br /&gt; தெரியாதவனே!&lt;br /&gt;&lt;br /&gt;போகி தொடர்ந்தான்.&lt;br /&gt; சுமப்பதற்காகச் சுமக்கும்&lt;br /&gt; பெண்களைப் &lt;br /&gt; பழிப்பதில்லை நான்.&lt;br /&gt; இவ்வகையினர் இல்லாமல்&lt;br /&gt; இவ்வுலகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt; சுமந்ததால் சுமக்க மறுக்கும்&lt;br /&gt; பெண்களைத்தான்&lt;br /&gt; பழிக்கிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt; இன்னும் சொல்கிறேன்&lt;br /&gt; கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தோனேஷியக் காட்டுத்தீயில்&lt;br /&gt; சிறகுகள் மூடிப்&lt;br /&gt; பத்துக் குஞ்சுகள்&lt;br /&gt; காத்திருந்ததாம்&lt;br /&gt; கருகிப்போன தாய்க்கோழி!&lt;br /&gt;&lt;br /&gt; தன் நிழலில் வளரும் &lt;br /&gt; கன்றுகளைப் பாதிப்பதில்லை&lt;br /&gt; வெட்டப்படும் வாழைக்கன்று!&lt;br /&gt;&lt;br /&gt; தன் ரத்தம் தந்து&lt;br /&gt; குஞ்சுகளின் பசி போக்குமாம்&lt;br /&gt; பெலிகன் என்ற பறவை!&lt;br /&gt;&lt;br /&gt; இயற்கையால் சபிக்கப்பட்ட&lt;br /&gt; பாம்புகூட &lt;br /&gt; எல்லாக் குட்டிகளையும்&lt;br /&gt; பதம் பார்ப்பதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால்&lt;br /&gt; தாய்வீடு செல்ல&lt;br /&gt; தலைவன் மறுத்தாலோ,&lt;br /&gt; மாமியார் விசயத்தில்&lt;br /&gt; மூக்கை நுழைக்க மணவாளன் மறுத்தாலோ,&lt;br /&gt; சிறு வருத்தத்தில்&lt;br /&gt; கண்கண்ட தெய்வம் அடித்தாலோ&lt;br /&gt; இவற்றுடன்&lt;br /&gt; சம்மந்தமில்லாக் குழந்தைகளுடன்&lt;br /&gt; தன்னையும் கொலைசெய்து கொள்வது&lt;br /&gt; வீரத்தமிழ்ப்பெண்கள்தான்!&lt;br /&gt;&lt;br /&gt; சுட்டிக் குழந்தையை&lt;br /&gt; washing machineல் போட்ட&lt;br /&gt; அமெரிக்கத் தாயும் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt; ஹிட்லர் செய்தால்&lt;br /&gt; கொடுங்கோல்!&lt;br /&gt; நல்லதங்காள் செய்தால்&lt;br /&gt; பச்சைப்புடவை பாராட்டு!&lt;br /&gt; இதுதானே&lt;br /&gt; உங்கள் சட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt; பிரசவமும்,&lt;br /&gt; தாய்ப்பாலும்&lt;br /&gt; ஒத்திவைக்கப்படுகின்றன&lt;br /&gt; அழகுக்குத் தடையாய்த் தெரிவதால்!&lt;br /&gt;&lt;br /&gt; இயந்திர உலகில்&lt;br /&gt; வாடகைக்குக் கிடைக்கும்&lt;br /&gt; கருப்பைகள்கூட!&lt;br /&gt;&lt;br /&gt; வருமானத்துக்காகப்&lt;br /&gt; கோரமாக்கப்படுகின்றன&lt;br /&gt; குழந்தைகளின் முகங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; வந்த விலைக்கு &lt;br /&gt; விற்கப்படுகின்றன&lt;br /&gt; பிரம்மனின் புதியவர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt; வேறு எந்த&lt;br /&gt; மிருகத்துக்கும் தெரியாது&lt;br /&gt; கள்ளிப்பாலின் மருத்துவக்குணம்!&lt;br /&gt;&lt;br /&gt; பறவைகளில் இல்லை&lt;br /&gt; கூடு குஞ்சுகள் திட்டம்.&lt;br /&gt; விலங்குகளில் இல்லை&lt;br /&gt; வளை குட்டிகள் திட்டம்.&lt;br /&gt; உங்களில் உண்டு&lt;br /&gt; தொட்டில் குழந்தைகள் திட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt; வளர்ந்த குஞ்சுகளைக்&lt;br /&gt; கொத்தி விரட்டுமாம்&lt;br /&gt; கோழி!&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால்&lt;br /&gt; நீங்களோ&lt;br /&gt; பிள்ளைகளின்&lt;br /&gt; எப்பேர்பட்ட தவறையும்&lt;br /&gt; மன்னிக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இப்படி ஒரு பாசம்&lt;br /&gt; தேவைதானா?&lt;br /&gt; இது தொடர்ந்தால்&lt;br /&gt; குருவிடமே அழகுதேடும்&lt;br /&gt; கேடுகெட்ட மனிதயினம்&lt;br /&gt; தாயிடம்கூட.....&lt;br /&gt;&lt;br /&gt; அட!&lt;br /&gt; எங்கே போனார்&lt;br /&gt; இந்த யோகி?&lt;br /&gt;&lt;br /&gt; சரி!&lt;br /&gt; இனிமேலாவது&lt;br /&gt; பதிபக்தி,&lt;br /&gt; ஆணாதிக்கம்,&lt;br /&gt; வறுமை,&lt;br /&gt; சம்பிரதாயங்கள்,&lt;br /&gt; குருட்டுப்பாசம்&lt;br /&gt; இவற்றை விட்டுவிட்டு&lt;br /&gt; தாய்ப்பாசத்தின் பெருமையைப் &lt;br /&gt; பெண்கள் காக்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt; இல்லையேல்.....&lt;br /&gt; தமிழ்த் தாய்ப்பாசம்&lt;br /&gt; எகிப்திய மம்மியாய்ப் போகலாம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர் (போகி)&lt;br /&gt;&lt;br /&gt;(யோகிகள் இருக்கும்வரை போகிகள் சாவதில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21903097-113948210705625886?l=jsgnanasekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jsgnanasekar.blogspot.com/feeds/113948210705625886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21903097&amp;postID=113948210705625886' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113948210705625886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113948210705625886'/><link rel='alternate' type='text/html' href='http://jsgnanasekar.blogspot.com/2006/02/blog-post_09.html' title='பெறுநர் : தாயுமானவள்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21903097.post-113937433510299704</id><published>2006-02-07T20:45:00.000-08:00</published><updated>2006-02-09T03:31:16.183-08:00</updated><title type='text'>பொய்க்கா(த)ல்கள்</title><content type='html'>சமர்ப்பணம் : (ரா.பார்த்திபன் சொன்னதுபோல்) வெளிவந்த பாதை போலவே வேறொன்றில் உட்புகத் துடிக்கும் செயலுக்குக் காதல் என்று பெயரிட்டவர்களுக்காக....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியானத்தில் இருந்தான்&lt;br /&gt;யோகி&lt;br /&gt;வேட்டி இல்லாமல்&lt;br /&gt;அருகில் அமர்ந்தான்&lt;br /&gt;போகி&lt;br /&gt;&lt;br /&gt;யோகியே ஆரம்பித்தான்.&lt;br /&gt; ஏன் இந்த&lt;br /&gt; அரைநிர்வாணப் பக்கிரி வேடம்?&lt;br /&gt;&lt;br /&gt;போகி பகர்ந்தான்.&lt;br /&gt;       வழியில் கிடந்த&lt;br /&gt;      அனாதைக் கிழவனின்&lt;br /&gt;      முழு நிர்வாணம் மறைக்க&lt;br /&gt;      என்&lt;br /&gt;      அரை நிர்வாணத்தை அடகு வைத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே தள்ளி அமர்ந்தான் யோகி.&lt;br /&gt;&lt;br /&gt;போகி கேட்டான்.&lt;br /&gt;      உலகில் மாறாதது எது?&lt;br /&gt;&lt;br /&gt;யோகி சொன்னான்.&lt;br /&gt;      ஐன்ஸ்டீன் பிறப்பால்&lt;br /&gt;      ஒளி மறைந்தது&lt;br /&gt;      காதல் மட்டும் மிச்சம்&lt;br /&gt;&lt;br /&gt;போகியின் கேள்வி.&lt;br /&gt;      காதல் என்பதென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;யோகியின் பதில்.&lt;br /&gt;      வரலாற்றைக் கேட்டென்&lt;br /&gt;      காதலைத் தெரியுமாவென்று&lt;br /&gt;      அது சொன்னது&lt;br /&gt;      காதல் &lt;br /&gt;      ஆப்பிளில் பிறந்தது&lt;br /&gt;      ஏதேனில் வளர்ந்தது&lt;br /&gt;      ஊனம் உடைத்தது&lt;br /&gt;      சாதியைச் சவுக்கால் அடித்தது&lt;br /&gt;      மதம் மறந்தது&lt;br /&gt;      எல்லை தாண்டியது&lt;br /&gt;      கருவிகள் செய்தது&lt;br /&gt;      பதவி துறந்தது&lt;br /&gt;      உயிர்விட்டது&lt;br /&gt;      &lt;br /&gt;      காதல் கற்கவில்லை&lt;br /&gt;      காதல் கற்பிக்கப்படவுமில்லை&lt;br /&gt;      காதல் மணக்கவில்லை&lt;br /&gt;      காதலால் பலர் மணந்துகொண்டனர்&lt;br /&gt;&lt;br /&gt;போகி இடைமறித்தான்.&lt;br /&gt;      அதே வரலாறுதான் சொன்னது&lt;br /&gt;      காதல் &lt;br /&gt;      சுவரேறிக் குதித்தது&lt;br /&gt;      பெற்றோரைவிட்டு ஓடிப்போனது&lt;br /&gt;      தற்கொலை செய்தது&lt;br /&gt;      சந்தேகப்பட்டது &lt;br /&gt;      காட்டிக்கொடுத்தது&lt;br /&gt;      வயது மறந்தது&lt;br /&gt;      குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டது&lt;br /&gt; &lt;br /&gt;      பலர் காதலால் &lt;br /&gt;      இயற்கை எய்தினர்&lt;br /&gt;      காதல்&lt;br /&gt;      இயற்கையில் எஞ்சியது&lt;br /&gt;&lt;br /&gt;யோகி கேட்டான்.&lt;br /&gt;      ஏன் கனியிருப்பக்&lt;br /&gt;      காய் கவர்கிறாய்?&lt;br /&gt;      நிலவை ரசி&lt;br /&gt;      களங்கத்தைப் பார்க்காதே&lt;br /&gt; &lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt;      நிலவின் மறுபக்கத்தைப்&lt;br /&gt;      பார்த்தவன் நான்&lt;br /&gt;      எனக்குத் தெரியும்&lt;br /&gt;      சூரியன் உதிப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;போகி இன்னும் சொன்னான்.&lt;br /&gt;      உங்கள் காதல்&lt;br /&gt;      அசிங்கங்களை&lt;br /&gt;      அம்பலப்படுத்துகிறேன்  கேளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;      முன்னால்போய்&lt;br /&gt;      செலவுகள் செய்வீர்கள்&lt;br /&gt;      தெரிவதில்லை&lt;br /&gt;      அது பைனான்ஸில் போடும் பணம்....&lt;br /&gt;&lt;br /&gt;      முத்தங்கள்&lt;br /&gt;      நீங்கள் ஏமாறுவீர்கள் என்பதற்கான&lt;br /&gt;      ISI முத்திரைகள்....&lt;br /&gt;&lt;br /&gt;      தன் இதயம்&lt;br /&gt;      உன்னிடம் இருப்பதாகச் சொல்லி&lt;br /&gt;      உன் தாயின் இதயம் கேட்பாள்&lt;br /&gt;      தனக்குப் பொருத்த....&lt;br /&gt;&lt;br /&gt;      காதலா? கல்யாணமா?&lt;br /&gt;      என்ற பட்டிமன்றத்தில்&lt;br /&gt;      காதலர்கள் இருப்பர்&lt;br /&gt;      எதிரெதிர் அணியில்....&lt;br /&gt;&lt;br /&gt;      கல்யாண check post பார்த்தாலே&lt;br /&gt;      காதல் கள்ளச் சரக்கைப் போட்டுவிட்டு&lt;br /&gt;      காதலர்கள் ஓடுவர்&lt;br /&gt;      திசைக்கு ஒன்றாக....&lt;br /&gt; &lt;br /&gt;      வெள்ளாடு நீங்கள்&lt;br /&gt;      அலங்கரிக்கப் படுகிறீர்கள்&lt;br /&gt;      தழுவல்களால்....&lt;br /&gt;&lt;br /&gt;      அடுத்த வருடம்&lt;br /&gt;      ரக்க்ஷா பந்தன் கட்ட&lt;br /&gt;      ஒத்திகை பார்ப்பாள்&lt;br /&gt;      மாரியம்மன் கோயில் தாயத்தில்....&lt;br /&gt; &lt;br /&gt;      காதல்வலி வந்ததால்&lt;br /&gt;      தாயின் பிரசவவலி&lt;br /&gt;      மறந்து போவீர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;      அந்தப் புற்றின்&lt;br /&gt;      எட்டாவது துளையில்&lt;br /&gt;      பாம்பைப் பார்த்ததாக&lt;br /&gt;      யாராவது சொன்னாலே&lt;br /&gt;      பால்வைக்க வரமாட்டான்&lt;br /&gt;      அப்பாவி காதலன்....&lt;br /&gt;&lt;br /&gt;யோகி இடைமறித்தான்.&lt;br /&gt;      கடவுள்&lt;br /&gt;      காதல்&lt;br /&gt;      இவை இரண்டும்&lt;br /&gt;      புரியாதவர்களுக்குப்&lt;br /&gt;      புரிந்தவர்களைப் பற்றி&lt;br /&gt;      புரியாது....&lt;br /&gt;&lt;br /&gt;போகி சொன்னான்.&lt;br /&gt;      கடவுளைப் புரிந்துகொண்டதாக&lt;br /&gt;      சொன்னார் ஒரு சாமியார்&lt;br /&gt;      இப்போது&lt;br /&gt;      அவரைப் புரிந்துகொள்ள யாருமில்லை&lt;br /&gt;      இருக்கிறார்&lt;br /&gt;      தனிமைச் சிறையில்....&lt;br /&gt;&lt;br /&gt;      நான் ஒருநாள்&lt;br /&gt;      காதலின் அந்தப்புரத்தை &lt;br /&gt;      ஒளிந்திருந்து பார்த்துவிட்டேன்&lt;br /&gt;      இருட்டுக்குள் தெரிந்தது உண்மை....&lt;br /&gt;&lt;br /&gt;      கடவுளின் இலக்கு அன்பு&lt;br /&gt;      காதலின் இலக்கு காமம்&lt;br /&gt;&lt;br /&gt;      காதல்&lt;br /&gt;      காமத்தின் மரூஉ&lt;br /&gt;      காதல் நதி&lt;br /&gt;      காமம் கடல்&lt;br /&gt;      காதல் மணியோசை&lt;br /&gt;      காமம் யானை&lt;br /&gt;      காதல் கருப்பை உயிர்&lt;br /&gt;      காமம் மண்&lt;br /&gt;      காதல் சூரியகாந்தி&lt;br /&gt;      காமம் சூரியன்&lt;br /&gt;&lt;br /&gt;      காமம் இலக்கில்லை என்றால்&lt;br /&gt;      எவனும் பயணிக்க மாட்டான்&lt;br /&gt;      காதல் பாதையில்....&lt;br /&gt;&lt;br /&gt;      ஆயுதம் இருப்பதாகக்கூறி&lt;br /&gt;      எண்ணெய் தேடுவது போல&lt;br /&gt;      காதல் இருப்பதாகச் சொல்லி&lt;br /&gt;      காமம் தேடுகிறீர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;      பகலில் current கொடுப்பதாகச் சொல்லி&lt;br /&gt;      இரவில் fuss எடுத்துக் கொள்கிறீர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;போகி இன்னும் சொன்னான்.&lt;br /&gt;      காதலில்&lt;br /&gt;      pass ஆனவர்களைவிட&lt;br /&gt;      காதலால் +2ல் &lt;br /&gt;      fail ஆனவர்கள் அதிகம்....&lt;br /&gt;&lt;br /&gt;      ஒரே வருடத்தில்&lt;br /&gt;      நான்கு பேரைக் காதலிக்கிறீர்கள்&lt;br /&gt;      அல்லது&lt;br /&gt;      நான்கு வருடமாய்&lt;br /&gt;      ஒருத்தியைக் காதலிக்கிறீர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;      மீனுக்கு மூன்று நாள்&lt;br /&gt;      காதலுக்கு அறுபதுநாள்....&lt;br /&gt;&lt;br /&gt;      "போரில் ஜெயிக்க வேண்டும்&lt;br /&gt;      காதலில் தோற்க வேண்டும்"&lt;br /&gt;      -காதலர்களின் தாரகமந்திரம்....&lt;br /&gt;&lt;br /&gt;      காதலிக்கும் ஆணும்&lt;br /&gt;      காது குத்திக் கொள்ளும் ஆணும்&lt;br /&gt;      ஒரேபோல்&lt;br /&gt;      தெரிந்தே தோற்கின்றனர்....&lt;br /&gt;&lt;br /&gt;      இப்படி....&lt;br /&gt;      சதி    &lt;br /&gt;      நம்பிக்கையின்மை   &lt;br /&gt;      நம்பிக்கைத்துரோகம்&lt;br /&gt;      தற்கொலை&lt;br /&gt;      கோழைத்தனம்&lt;br /&gt;      சுயநலம்&lt;br /&gt;      ஊதாரித்தனம்&lt;br /&gt;      போன்ற பாடங்களைப் போதிக்கும்&lt;br /&gt;      காதலைப்....&lt;br /&gt;&lt;br /&gt;      அட&lt;br /&gt;      எங்கே போனார்&lt;br /&gt;      இந்த யோகி?&lt;br /&gt;&lt;br /&gt;      சரி....&lt;br /&gt;      இனிமேலாவது&lt;br /&gt;      சந்ததிகள் பெருக்க&lt;br /&gt;      இயற்கை கற்றுத் தந்த வித்தையைக்&lt;br /&gt;      காதல் என்ற பெயரில்&lt;br /&gt;      கொச்சைப்படுத்தாமல் இருப்போம்....&lt;br /&gt;&lt;br /&gt;-ஞானசேகர் (போகி)&lt;br /&gt;&lt;br /&gt;(யோகிகள் இருக்கும்வரை போகிகள் சாவதில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21903097-113937433510299704?l=jsgnanasekar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jsgnanasekar.blogspot.com/feeds/113937433510299704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21903097&amp;postID=113937433510299704' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113937433510299704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21903097/posts/default/113937433510299704'/><link rel='alternate' type='text/html' href='http://jsgnanasekar.blogspot.com/2006/02/blog-post_07.html' title='பொய்க்கா(த)ல்கள்'/><author><name>J S ஞானசேகர்</name><uri>http://www.blogger.com/profile/14586649169508078187</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-LSU8lQBYS10/TpqG0PCSdyI/AAAAAAAAF2M/xFgncihGEps/s220/IMG_2128.JPG'/></author><thr:total>3</thr:total></entry></feed>
